மும்பை,
இந்தி திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். இவர் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் லக் பை சான்ஸ், பூத் நாத் ரிட்டர்ன் போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார்.
அனுராக் காஷ்யப் தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான 'லியோ' படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மகாராஜா படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.
இந்நிலையில், இவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, அக்சத் அஜய் சர்மா இயக்கத்தில் அனுராக் காஷ்யப் நடிக்க உள்ளார். இப்படத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான 'வாலிப ராஜா' படத்தில் நடித்திருந்த நுஷ்ராத் பரூச்சா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் பெயர் அறிவிக்கப்படாதநிலையில், புகைப்படங்களை வெளியிட்டு படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.