அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: 191 பேர் கைது

2 months ago 9

விருதுநகர், டிச.5: வங்கதேசத்தில் தொடர்ந்து இந்துக்கள் மற்றும் இந்துக் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். அனுமதியின்றி விருதுநகர் தேசபந்து மைதானத்தில் வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு சார்பாக கூடினர்.ஆர்.எஸ்.எஸ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜ கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் உட்பட 191 பேரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

The post அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: 191 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article