மதுரை: விருதுநகரில் அனுமதி பெறாமல் வைத்ததாக பறிமுதல் செய்த பாரத மாதா சிலையை பாஜகவினரிடம் திரும்ப ஒப்படைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சூரக்குண்டு அருகே விருதுநகர் மாவட்ட பாஜக அலுவலகம் உள்ளது. அலுவலகம் முன்பு வெளியே மக்களுக்கு தெரியும் வண்ணம் "பாரத மாதா" சிலை நிறுவப்பட்டிருந்தது. அனுமதி பெறாமல் சிலை வைத்ததாக கூறி சிலையை வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அங்கிருந்து அகற்றினர்.