
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தாம்பரத்தில் இருந்து வருகிற ஜூன் 10-ந்தேதி இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (20691), நெல்லை-நாகர்கோவில் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, நெல்லையில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தற்போது ரத்து செய்யப்பட்டு வழக்கம் போல் நாகர்கோவில் வரையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, நாகர்கோவிலில் இருந்து ஜூன் 11-ந் தேதி புறப்பட்டு தாம்பரம் வரும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலும் வழக்கம் போல் இயக்கப்படும்.நாகர்கோவிலில் இருந்து ஜூன் 11-ந்தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16321) நாகர்கோவில்-வள்ளியூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, வள்ளியூரில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த ரெயில் வழக்கம் போல் நாகர்கோவிலில் இருந்தே புறப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.