
சென்னை,
அதிமுகவிலிருந்து 2 மாவட்டச் செயலாளர்கள் விடுவித்து, அவர்களுக்கு பதிலாக புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு;
கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி. ஜாண்தங்கம் மற்றும் திருவட்டார் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு.ஆர். ஜெயசுதர்ஷன் இருவரும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் ஆர்.ஜெயசுதர்ஷன் ( கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு அச்சக முன்னாள் தலைவர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.