தேவர்குளத்தில் பெண்ணை அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவானவர் கைது

3 hours ago 1

திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஒரு பெண்ணை அவதூறாக பேசிய வழக்கில் தடியம்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (வயது 42), கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 5 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு திருநெல்வேலி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கருப்பசாமியை தேவர்குளம் போலீசார் தேடிவந்த நிலையில் இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

Read Entire Article