திருப்பூர்: அதிமுக பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என, திருப்பூரில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விமர்சித்தார்.
தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் கட்டுப்பாட்டில் அரசு அச்சகங்கள் இயங்குகின்றன. திருப்பூர் பல்லடம் சாலையில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள ராமசாமி முத்தம்மாள் மண்டப வளாக பகுதியில் புதிய அரசு அச்சகக் கிளையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று (ஏப். 11) மாலை திறந்து வைத்தார்.