ஓமலூர், ஜன.21: சேலம் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஓமலூர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, தொண்டர்கள் ஆளுயர மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி, பின்னர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து கேட்டறிந்தார். வரும் சட்டமன்ற தேர்தலில், முன்பு பணியாற்றியதை விட, பல மடங்கு உற்சாகத்துடன் பணியாற்ற வேண்டும். மீண்டும் அதிமுக ஆட்சி அமைய தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும். அதிமுகவிற்கு மக்கள் பெரும் ஆதரவு வழங்கும் அளவிற்கு, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
The post அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.