அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரன் மீண்டும் சிறையில் அடைப்பு

1 week ago 2

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்​கில் கைதான ஞானசேகரனின் 7 நாள் போலீஸ் காவல் முடிந்து அவர் மீண்​டும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்​தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்​தில் கோட்​டூர்​புரத்​தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்​யப்​பட்​டார். அவரிடம் 7 நாள் காவலில் விசா​ரிக்க சைதாப்​பேட்டை நீதி​மன்றம் கடந்த 19-ம் தேதி அனுமதி வழங்​கியது.

கடந்த 21-ம் தேதி விசா​ரணை​யின்​போது ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்​டது. அதேபோல் நேற்று முன்​தின​மும் வாந்தி வயிற்றுப்​போக்கு ஏற்பட்​டது. இதனால் அவர் ஸ்டான்லி அரசு மருத்​துவ​மனை​யில் இருமுறை சேர்க்​கப்​பட்​டார். பின்னர் உடல்​நலம் தேறிய நிலை​யில் மீண்​டும் விசாரணை தொடர்ந்​தது. இந்நிலை​யில், 7 நாள் போலீஸ் காவல் முடிந்த நிலை​யில் நேற்று அவரை சைதாப்​பேட்டை நீதி​மன்​றத்​தில் போலீ​ஸார் ஆஜர்​படுத்​தினர்.

Read Entire Article