அண்ணா நகரில் ஒரு மணி நேரத்தில் 9 செ.மீ. பதிவு: சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை

3 months ago 14

சென்னை: சென்னையில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. அண்ணா நகரில் ஒரு மணி நேரத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டத்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 15-ம் தேதி கனமழை பெய்தது. அன்றைய தினமே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

அதன் பிறகு, வங்கக்கடலில் ‘டானா’ புயல் உருவான நிலையில், தமிழகம் நோக்கி வீசவேண்டிய ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசை காற்று, புயலின் பக்கம் ஈர்க்கப்பட்டு, ஆந்திரா, ஒடிசா நோக்கி சென்றது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 15 நாட்களாக குறிப்பிடும்படியாக மழை பெய்யவில்லை. சில நாட்களாக பகல் நேரத்திலேயே பனிப்பொழிவு நிலவியது.

Read Entire Article