அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல்: 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்

1 day ago 5

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பூத்கமிட்டி அமைத்தல், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் என அடிப்படை பணிகளை மேற்கொண்டு வருகின்றன. சில கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வையும் நடத்தி வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், கூட்டணியை இறுதி செய்யும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. தற்போதைய சூழலில் தமிழகத்தில் 4 முனை போட்டி இருக்கும் என தெரிகிறது. திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, நடிகர் விஜய்யின் தவெக மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிகள் தனித்தனியாக களம் காண தயாராகி வருகின்றன. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதில் ஏதேனும் மாற்றங்கள் நிகழலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

Read Entire Article