திண்டுக்கல்: பழநி செல்லும் பாதயாத்திரை பக்தர்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு ஏற்படுவது தொடர்கிறது. மாவட்ட எல்லையில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் ஒளிரும் ஸ்டிக்கர் அடங்கிய குச்சிகள் இந்த ஆண்டு போதிய அளவு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநிக்கு தைப்பூசவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழநி நோக்கி செல்கின்றனர். இவர்கள் காலணிகள் அணியாமல் நடப்பதால் வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ள பகல் நேரத்தில் ஆங்காங்கே தங்கி ஓய்வடுத்துவிட்டு அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக பயணம் மேற்கொள்ளகின்றனர்.