அடுத்த ஐ.பி.எல். தொடரில் விளையாடுவீர்களா..? தோனி பதில்

22 hours ago 3

சென்னை,

ஐ.பி.எல். தொடரில், சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 19.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாம் கர்ரன் 88 ரன்கள் அடித்தார். ஒரு கட்டத்தில் 200 ரன்களை எளிதில் தாண்டுவது போல் சென்ற ஸ்கோர் கடைசி 18 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்ததால் அந்த ஸ்கோரை அடைய முடியாமல் போய் விட்டது. பஞ்சாப் தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 'ஹாட்ரிக்' உட்பட 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 72 ரன்கள் அடித்தார்.

இந்த போட்டிக்கான டாஸ் வீசும் நிகழ்வில் தொகுப்பாளர் டேனி மோரிசன், மகேந்திரசிங் தோனியிடம் , உங்களுக்கு ரசிகர்களிடம் காணப்படும் வரவேற்பை பார்க்கும்போது அடுத்த சீசனிலும் விளையாடுவீர்கள் தானே?" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த தோனி, "நான் அடுத்த போட்டியில் விளையாட வருவேனா என்பதே எனக்கு தெரியாது" என்று கிண்டலாக கூறினார். 

Read Entire Article