
சியோல்,
தென்கொரியாவில் ராணுவ அவசர நிலை அறிவித்த விவகாரம் தொடர்பாக அதிபர் யூன் சுக்-இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அந்த நாட்டின் பிரதமர் ஹான் டக்-சூ (வயது 70) தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி நடைபெறுகிறது. இதில் பழமைவாத கட்சியான தென்கொரிய மக்கள் சக்தி கட்சி சார்பில் ஹான் டக்-சூ போட்டியிடுகிறார்.
இதனால் தனது அதிபர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து துணை பிரதமர் சோய் சாங்-மோக் தற்காலிக அதிபராக செயல்படுவார் என அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.