அடுத்த ஆண்டு இதே நேரம் 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

2 days ago 3


மதுரை மாவட்டம் உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திமுக பொதுக்குழு கூட்டம் அக்கட்சியினர் மத்தியிலும், அரசியல் களத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைத்தொடர்ந்து தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

அந்தக் காலத்தில் எந்த ஊருக்குச் சென்றாலும் நம்முடையகொடி பறக்கிறதா என்று என் கண்கள் தேடும். தமிழ்நாட்டில் அத்தனை ஊரிலும், அத்தனை நகரத்திலும் அதிகக் கொடி ஏற்றிய கை, இந்த ஸ்டாலினின் கை.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் - அறிவுலக ஆசான் பேரறிஞர் அண்ணா - தமிழினத் தலைவர் கலைஞர் - திராவிட முன்னேற்றக் கழகம் - கருப்பு சிவப்புக் கொடி - உதயசூரியன் சின்னம் - அண்ணா அறிவாலயம், இவைதான் நம் உயிர்

தடம் மாறாத கொள்கைக் கூட்டம் நாம்! அதனால்தான் எந்த கோமாளிக் கூட்டத்தாரும் நம்மை வெல்ல முடியவில்லை; இனியும் வெல்ல முடியாது!

ஏழாவது முறையாக வாகை சூட வியூகம் வகுக்கும்பொதுக்குழு! அடுத்த ஆண்டு இந்த நேரத்தில்என்ன மாதிரி தலைப்புச் செய்தி வந்திருக்கவேண்டும் என்றால், "ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சி அமைத்தது. கழகக் கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது!". "இரண்டாவது முறையாக திராவிட மாடல் ஆட்சி தொடர்கிறது!".இதுதான் தலைப்புச் செய்தியாக இருக்கவேண்டும்! அதுக்கான வியூகத்தை வகுக்கும்பொதுக்குழுதான் இது!

நான் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து, நாம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கான காரணங்களில் ஒன்று, நம்முடைய கூட்டணி.. அவர்களோடு நான் எப்படி நட்போடும் பாச உணர்வோடும் பழகுகிறேனோ, நீங்களும் அதே உணர்வோடு கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து செயலாற்ற வேண்டும்.

என்னைப் பொறுத்தவரைக்கும், பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம்.. சொல்லைவிட செயலே பெரிது, வரலாறு காணாத வெற்றியை நாம் பதிவு செய்வோம் என்று சொல்வது, உங்கள் மேல்இருக்கும் நம்பிக்கையில்தான்..

இளைஞர்களுக்கு வாய்ப்பைக் கொடுங்கள்.. எந்தளவுக்கு இளைஞர்களுக்கு இடம் கொடுக்கிறீர்களோ, அந்தளவுக்கு கழகத்தில் புது ரத்தம் பாயும், செயல்பாடுகள் வேகமாக இருக்கும், வெற்றி உறுதி செய்யப்படும்.

எந்தக் காலத்திலும் எனக்கு ஆணவமோ, மமதையோ வராது. என்னைப் பொறுத்தவரை பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம் உலகத்தில் எந்த கட்சிக்கும் இப்படி உறுதிமிக்க உழைப்பாளிகள் தொண்டர்களாக கிடைக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article