ராமேசுவரம்: அக்ரஹாரத்துக்கு தானமாக தந்த நிலத்தை அழிப்பவருக்கு, பசுக்களை கொன்ற பாவம் கிடைக்கும்' என்ற தகவல் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் கண்டெடுக்கப்பட்ட கி.பி.16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேதுபதி மன்னர் செப்புப்பட்டயத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சம்பத் குமார் தனது பெற்றோர்களான காந்தி, பாண்டீஸ்வரி ஆகியோரிடம் ஒரு பழமையான செப்புப்பட்டையம் இருப்பதாக ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுருவுக்கு கொடுத்த அளித்த தகவலின் பேரில், கடலாடியில் இருந்த பட்டையத்தை அவர் படித்து ஆய்வு செய்தார்.