பழனிசாமி - அமித் ஷா சந்திப்பு, 2026-ல் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி என்ற அமித் ஷாவின் பதிவு, பிரதமர் மோடி மீது தவெக தலைவர் விஜய் விமர்சனம் என பாஜக-வை சுற்றி தமிழக அரசியல் களம் சுறுசுறுப்பாகி வரும் நிலையில், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.
ஆளுநர்கள் அரசியல்வாதிகள் போல் செயல்படுவதால் தான் மாநில அரசுடன் மோதல் ஏற்படுகிறதா? - அரசியல் ரீதியாக செயல்படுவது என்பதைத் தாண்டி, மக்கள் பிரச்சினைகள் குறித்து சிந்தித்து, அவர்களுக்காக ஆளுநர்கள் செயல்படுவது ஆட்சியாளர்களுக்கு பிடிப்பதில்லை. நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், எங்களுக்குத்தான் உரிமை என்ற வசனத்தை அடிக்கடி அவர்கள் சொல்வார்கள்.