அகில இந்திய அளவில் பழுதூக்கும் போட்டி: தமிழக காவல்துறைக்கு 14 பதக்கங்கள் - வெற்றியாளர்களுக்கு டிஜிபி பாராட்டு

5 months ago 34

சென்னை: அகில இந்திய அளவில் நடைபெற்ற காவல் துறையினருக்கான பளுதூக்கும் போட்டியில் தமிழக அணியினர் 14 பதக்கங்களை வென்று அசத்தினர். வெற்றியாளர்களை நேற்று நேரில் அழைத்து டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டினார்.

முதலாவது அகில இந்திய காவல்துறை பளுதூக்கும் குழு போட்டிகள் (2024) கடந்த மாதம் 23 முதல் 27-ம் தேதி வரை சத்தீஸ்கர் மாநிலம் பிளாய் மாவட்டத்தின் துர்க் நகரில் நடைபெற்றது. இப்போட்டியை சத்தீஸ்கர் மாநில காவல்துறை நடத்தியது. இதில், தமிழ்நாடு காவல்துறை பளு தூக்கும் குழு (பளு தூக்குதல், வலு தூக்குதல், யோகா) சார்பில் 75 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

Read Entire Article