அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்த விமர்சனங்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில்

3 hours ago 2

சென்னை,

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு நடத்தப்படாது என கூறினர். அவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்று 5 வது நீட் தேர்வு நடக்கிறது, தி.மு.க.வை எதிர்த்து நீட் தேர்வு - நீட்டாக நடக்கிறது.

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் எந்த அழுத்தமும் இல்லை,. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தான் பிரஷர் உள்ளது.

தமிழக பள்ளிகளில் சாதி பாகுபாடும், அரிவாள் கலாச்சாரமும் உருவாகி உள்ளது. 3,5,8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பற்றி எதுவும் தெரியாமல் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய் பேசுகிறார்; மாணவர்களின் படிப்பில் அரசியலை கலக்க வேண்டாம்.

பொய்யாமொழி என்று பெயர் வைத்திருக்கும் அமைச்சர் பொய் சொல்லாமல் உண்மையை சொல்ல வேண்டும். அதிமுக- பாஜக கூட்டணியை கண்டு திமுக பதறுகிறது. விஜய்யும், அதிமுக- பாஜகவும், திமுக எதிர்ப்பு டீம் தான்" என்று கூறினார். 

Read Entire Article