பழைய துணி நம் மூளையை பதம் பார்க்கும் துணி என்று கூட சொல்லலாம். பாத்திரக் காரர்களுக்கு போடலாம் என்றால் அவர் ரூ. 500, 1000… கொடுத்து வாங்கிய துணிகளை அஞ்சு, பத்துக்குக் கேட்பார். சரி பழைய இரும்புக்குக் கொடுக்கலாம் என்றால் கிலோ ரூ. 10 , 20… என்பார். இதற்கு ஒரே வழி நம் துணிகளை நாமே ஆன்லைனில் விற்பது. நமக்கு பழசு என நினைக்கும் உடைகள் பலருக்கும் புதிதாக இருக்கலாம். அதற்குத் தான் உதவுகிறது ஃப்ரீஅப் செயலி (FreeUp: Sell & Buy Clothes). உங்கள் உடைகளை அழகாக ஹேங்கரில் மாட்டி முன், பின் பக்கங்கள் என புகைப்படம் எடுத்து இந்த செயலியில் விற்கலாம். நம்மைப் போலவே பலரும் இங்கே அவர்கள் துணிகளை விற்பனைக்கு வைத்திருப்பார்கள்.தேவைப்பட்டால் நாம் அவற்றை வாங்கலாம். நாம் விரும்பி வாங்கிய உடையை நாம் விரும்பும் விலையில் இங்கே இரண்டாம் விற்பனைக்கு கொடுத்து சம்பாதிக்கவும் செய்யலாம்.
The post ஃப்ரீஅப் செயலி! appeared first on Dinakaran.