9-வது பேட்டிங் வரிசையில் களமிறங்கிய தோனி.. கலாய்த்த சேவாக்

2 days ago 2

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரஜத் படிதார் 51 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் நூர் அகமது 3 விக்கெட்டுகளும், பதிரனா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் 197 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 146 ரன்களே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 41 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், யாஷ் தயாள், லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனி, 9-வது வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கினார். அந்த வரிசையிலும் அதிரடியாக விளையாடிய அவர் 16 பந்துகளில் 30 ரன்கள் அடித்தார்.

இருப்பினும் அவர் முன்கூட்டியே களமிறங்கியிருக்க வேண்டும் என்று பல முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர்.

இதனிடையே தோனி 9-வது வரிசையில் பேட்டிங் செய்ய வந்ததை இந்திய முன்னாள் வீரரான சேவாக் 'உண்மையில் தோனி முன்னதாகவே பேட்டிங் செய்ய வந்தார்' என்று கலாய்த்தார்.

இது குறித்து விரிவாக பேசிய சேவாக், "வழக்கமாக, அவர் 19வது அல்லது 20வது ஓவரில்தான் வருவார். ஆனால் இன்று 16-வது ஓவரிலேயே பேட்டிங் செய்ய வந்துள்ளார். அதனால் அவர் சீக்கிரமாக தானே பேட்டிங் செய்ய வந்தார், இல்லையா? " என்று கூறினார்.

Read Entire Article