சென்னை: ரூ.50 கோடியில் 8 புதிய சமத்துவபுரங்கள் கட்டும் பணி அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்படும். சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 மாவட்டங்களில் 34 உயர்மட்ட பாலங்கள் அமைக்க ரூ.177.85 கோடி மாநில சிறப்பு நிதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. ரூ.500 கோடி மதிப்பீட்டில் ஏரிகள் புனரமைப்பு பணி, அரசு நிதி மூலம் மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post 8 புதிய சமத்துவபுரம் கட்டும் பணி 2026ல் முடியும்: ஊரக வளர்ச்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் appeared first on Dinakaran.