சென்னை: நாடு முழுவதும் குடியரசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, சென்னை மெரினா கடற்கரையில் தேசியக் கொடியை ஏற்றி அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் காலை 8 மண அளவில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. விழாவில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக வருகை தந்த ஆளுநர் ஆர்.என். ரவியை, முதல்வர் மு.க. ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். விழாவில், அமைச்சர் துரைமுருகன், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.