ஒரு நாள் கிரிக்கெட்டில் ‘அனைத்து கால சிறந்த ஸ்கோரர்’ என்று நினைவுகூரப்படுபவராக இருப்பார் விராட் கோலி என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக அவர் எடுத்த சதம் மூலம் 14,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார் கோலி. பாண்டிங்கை கடந்து விட்ட கோலி இன்னும் 149 ரன்களே பின் தங்கியுள்ளார் சங்கக்காராவையும் கடந்து செல்ல. ஆனால் உண்மையான ஆல்டைம் கிரேட் சச்சின் டெண்டுல்கரை எட்டிப்பிடிக்க கோலி இன்னும் 4,341 ரன்கள் எடுக்க வேண்டும். இந்த ரன்களையும் எடுத்து விட்டுத்தான் ஓய்வு பெறுவேன் என்று கோலி சொன்னால் கம்பீருக்கும் அணித்தேர்வுக் குழுவுக்கும் கிலிதான்.