5 தமிழக மீனவர்கள் விடுதலை: படகு ஓட்டுநருக்கு அபராதம் விதித்தது இலங்கை நீதிமன்றம்

4 months ago 17

ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 5 பேரை விடுதலை செய்தும், படகின் ஓட்டுநருக்கு அபராதம் விதித்தும் இலங்கையில் உள்ள ஊர்காவல் துறை நீதிமன்றம் இன்று (அக்.25) உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து கடலுக்குச் சென்ற கலைவாணன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். அந்தப் படகிலிருந்த கே.ரமேஷ் (27), ஆர்.ஜானகிராமன் (27), டி.கிருஷ்ணன் (68), குமார் (40), உ.ரமேஷ் (51), ராஜ் (55) ஆகிய 6 மீனவர்களை அக்.9-ல், இலங்கைக் கடற்படை கைது செய்தது. இந்த 6 மீனவர்களின் நீதிமன்றக் காவல் இன்று (அக்.25) நிறைவடைந்தது.

Read Entire Article