40 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி வீராங்கனை

4 hours ago 1

ரோம்,

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் கோகோ காப் (அமெரிக்கா), 5-ம் நிலை வீராங்கனையான ஜாஸ்மின் பாவ்லினியை (இத்தாலி) எதிர்கொண்டார்.

1 மணி 29 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பாவ்லினி 6-4, 6-2 என்ற நேர் செட்டில் கோகோ காப்பை தோற்கடித்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலி வீராங்கனை ஒருவர் இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 1985-ம் ஆண்டு ரபேல்லா ரெக்கி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

Read Entire Article