தினசரி 4 லட்சம் பயணிகள் வந்து செல்லும் சென்னை சென்ட்ரல் புறநகர் முனையத்தில், 4 பெஞ்சுகள் மட்டுமே உள்ளதால், பயணிகள் தரையில் அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ரயில் ஏற வரும் பயணிகள் மிகவும் சிரமமடைகின்றனர். சென்னை சென்ட்ரல் புறநகர் முனையத்தில் இருந்து ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, நெல்லூர், திருப்பதி ஆகிய ஊர்களுக்கு தினசரி புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.
வேலை, கல்வி, சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் தினமும் இந்த ரயில் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். நாள்தோறும் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சென்ட்ரல் ரயில் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.