“4,979 ஏக்கரில் எங்கும் டங்ஸ்டன் சுரங்கம் வராது!” - மேலூரில் அண்ணாமலை உறுதி

3 weeks ago 5

மதுரை: மேலூர் பகுதியில் டங்ஸ்டன் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள 4979 ஏக்கர் பரப்பளவிலும் டங்ஸ்டன் சுரங்க திட்டம் வராது. இதை மத்திய அமைச்சர் விரைவில் அறிவிப்பார் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஏ.வல்லாளப்பட்டி மந்தை திடலில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மேலூர் பகுதியில் 4,979 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் நடந்த இந்துஸ்தான் ஜிங் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டது. இதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் தெரிவித்தோம். இதையடுத்து டங்ஸ்டன் சுரங்கத்துக்கு மாநில அரசு ஒப்புதல் கொடுக்க வேண்டாம் என மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் பிறகும் போராட்டம் தொடர்கிறது.

Read Entire Article