23 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

4 weeks ago 5

சென்னை,

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், தூத்துக்குடி, குமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், கடலூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article