‘2026ல் 7வது முறையாக கழக ஆட்சியை அமைக்க உறுதியேற்போம் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

1 week ago 7

சென்னை : 2026-இல் 7 ஆவது முறையாக கழக ஆட்சியை அமைக்க உறுதியேற்போம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஆட்சி பொறுபேற்று இன்றுடன் 4ம் ஆண்டை நிறைவு செய்து 5 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”நூறாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் வழியில் நடைபோட்டு, 4 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு. அறிவியலின் துணையோடு கொரோனாவை வென்றதில் தொடங்கி – பகுத்தறிவின் துணையோடு தமிழ்நாட்டைச் சூழ வரும் பிற்போக்கு நோய்களையும் வென்று கொண்டிருக்கிறார் நம் முதலமைச்சர் அவர்கள்!

நம் திராவிட மாடல் அரசின் திட்டங்களால் தமிழ்நாடு நம்பர்-1 என தலைநிமிர்ந்து நிற்கிறது. திராவிட மாடல் என்றால் சாதனை மாடல் ; ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்துக்கும் வழிகாட்டும் வளர்ச்சிக்கான மாடல் என்று வரலாறு நிச்சயம் சொல்லும். கழக அரசு 5-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நாளில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் பேரறிஞர் அண்ணா – முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.2026-இல் 7 ஆவது முறையாக கழக ஆட்சியை அமைக்க உறுதியேற்போம்” என தெரிவித்துள்ளார்.

The post ‘2026ல் 7வது முறையாக கழக ஆட்சியை அமைக்க உறுதியேற்போம் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article