மகாராஷ்டிரா: தானே மாவட்டத்தில் 17 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி ரயில் நிலையத்தில் யாசகம் பெற வைத்த பெற்றோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் அவர்கள் போதைத் தரும் பானங்களை சிறுமிக்கு வற்புறுத்தி குடிக்க வைத்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அச்சிறுமி காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பெற்றோர் மீது குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
The post 17 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி யாசகம் பெற வைத்த பெற்றோர் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.