சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் மார்ச் மாதம் பூமிக்கு திரும்புவர் என தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 12ம் தேதி ஏவப்படும் க்ரூ-10 டிராகன் விண்கலம் மூலம் சுனிதா, வில்மோர் பூமிக்கு திரும்புவார்கள் என கூறப்பட்டுள்ளது. 2024 ஜூன் 5ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த சுனிதா, வில்மோர் இதுவரை பூமிக்கு திரும்பவில்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்ப முடியாமல் விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர் .
The post பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் appeared first on Dinakaran.