மதுரை: இந்து மதத்தைச் சேராத வெளிநாட்டினருடன் நடைபெறும் திருமணங்களை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த இளைஞர் தனது திருமணத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில், ‘நான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். என் மனைவி இந்து மதத்தைச் சேர்ந்தவர். எங்களுக்கு பெற்றோர் சம்மதத்துடன் 2005-ல் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் என் மனைவி தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.