பெரம்பூர்: 16வயது சிறுமியின் கர்ப்பம் கலைக்கப்பட்டது தொடர்பாக காதலனை தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் 36 வயது மதிக்கத்தக்க பெண், தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது 16 வயது மகள், அங்குள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கொளத்தூர் பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவரை கடந்த 7 மாதமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்துள்ளதாக தெரிகிறது.
இந்தநிலையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் அவரது தாய் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி விசாரித்தபோது நடந்தது பற்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து கருக்கலைப்பு மாத்திரையை வாங்கி கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக கடும் வயிற்வலி ஏற்பட்டு அவதிப்பட்ட சிறுமியை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து மருத்துவமனை சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின்படி, எம்கேபி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனிடையே வாலிபரை தேடி வருகின்றனர்.
The post 16 வயது சிறுமியின் கருக்கலைப்பு: காதலனுக்கு வலைவீச்சு appeared first on Dinakaran.