111 ஆண்டு பழமையான பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை அகற்ற ரயில்வே முடிவு!

4 months ago 14

ராமேசுவரம்: புதிய பாம்பன் ரயில் பாலப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 111 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை கடலிருந்து அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

19-ம் நூற்றாண்டின் இறுதியில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலும் கடலில் ரயில் பாலம் கட்ட ஆங்கிலேயர்களால் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு கைவிடப்பட்டது. தொடர்ந்து, இந்திய நாட்டின் நிலப்பகுதியையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பனுக்கும் மண்டபத்துக்கும் கடலில் ரயில் பாலமும், நடுவே கப்பல் கடந்து செல்ல தூக்குப் பாலம் கட்டுவதென்றும், இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கையிலுள்ள தலைமன்னாருக்கும் சிறு கப்பல் போக்குவரத்து நடத்துவதென்றும் கி.பி.1911-ல் ஆங்கிலேய அரசு ஒப்புதல் அளித்து பணிகள் துவங்கப்பட்டன.

Read Entire Article