1100 கி.மீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை: வடகொரியா மீது தென் கொரியா குற்றச்சாட்டு

4 months ago 12

சியோல்: 2025ம் ஆண்டில் தனது ஆயுத சோதனைகளை தொடங்கும் நடவடிக்கையாக வடகொரியா இந்த ஆண்டில் முதல் முறையாக ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. இது குறித்து தென்கொரிய ராணுவ அதிகாரி கூறுகையில்,\” வடகொரியாவின் தலைநகரான பியாங்யாங்கிற்கு அருகே உள்ள பகுதியில் இருந்து வடகொரியா ஏவுகணையை ஏவியது. இந்த ஏவுகணை சுமார் 1100 கி.மீ. தூரம் சென்று கிழக்கு கடற்பகுதியில் விழுந்தது. வடகொரியாவின் ஏவுகணை சோதனை ஏற்பாடுகளை அமெரிக்கா மற்றும் தென்கொரியா முன்கூட்டியே கண்டறிந்தது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையானது கொரிய தீபகற்பத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கூடுதல் ஏவுகணைகள் பற்றி தகவல்களை அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் தென் கொரியா பகிர்ந்து கொள்ளும்’’ என்றார்.

The post 1100 கி.மீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை: வடகொரியா மீது தென் கொரியா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article