10-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ் கட்டாயப் பாடம் ஆக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்

1 month ago 13

சென்னை: சட்டம் இயற்றி 20 ஆண்டுகள் நிறைவடைந்தும் 10-ஆம் வகுப்புத் தேர்வில் தமிழ் இன்னும் கட்டாயப்பாடமாக்கப்படவில்லை. தமிழைக் கட்டாயமாக்காமல் பெருமை பேசுவதில் என்ன பயன்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கான பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நேற்று நடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன. வழக்கத்தைப் போலவே நடப்பாண்டிலும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்படவில்லை. தமிழக அரசின் அலட்சியம் தான் இதற்கு காரணம் ஆகும்.

Read Entire Article