''ஹவுஸ்புல் 5-ல் கதாநாயகியாக நடிப்பேன் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை'' - சவுந்தர்யா சர்மா

15 hours ago 5

மும்பை,

இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளவர் சவுந்தர்யா சர்மா . டெல்லியில் பிறந்து வளர்ந்த சவுந்தர்யா, கடந்த 2017-ல் வெளியான 'ராஞ்சி டைரீஸ்' மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது இவர் அக்சய் குமார் நடித்துள்ள ஹவுஸ்புல் 5 படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இந்த பட வாய்ப்பு குறித்து தனது உணர்ச்சிகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் பகிர்ந்த பதிவில், ' சினிமாவை நேசிக்கத் தொடங்கியபோது, நான் ரசித்த படங்களில் ஒன்று 'ஹவுஸ்புல்'. அந்த நேரத்தில், ஒரு நாள், இந்த படத்தில் ஒரு பகுதியாக முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்

Read Entire Article