ஸ்ரீவில்லி. பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர் உட்பட 4 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை - நடந்தது என்ன?

2 days ago 2

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர் மற்றும் கும்பாபிஷேக விழாவுக்கு வந்த அர்ச்சகர்கள், வீட்டில் ஆபாசமாக ஆடும் வீடியோ வெளியானதை அடுத்து, சம்பந்தப்பட்ட அர்ச்சகர்களை நீக்கி கோயில் விவகாரத்தில் தலையிட தடை விதித்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட பெரிய மாரியம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 2-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக, கடந்த 16-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு, கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோயில் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம் (30), கும்பாபிஷேக பணிக்கு வந்துள்ள அர்ச்சகர்களுடன் சேர்ந்து வீட்டில் ஆடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Read Entire Article