ஸ்பர்ஸ் திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்பத்தினர் 30.71 லட்சம் பேர் இணைப்பு: புதுச்சேரி ஆளுநர்

4 months ago 17

புதுச்சேரி: மத்திய அரசின் ஓய்வூதியம் பெறும் 56 லட்சம் பேரில் 57 சதவீதம் பேர் முன்னாள் படைவீரர்களாகவும் அவர்களின் குடும்பத்தினராகவும் இருக்கின்றனர். மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கான பட்ஜெட்டில் 65 சதவீத நிதியை இவர்களுக்காக ஒதுக்குகிறது. இவர்கள் குறைகளை தீர்வுகாணும் ஸ்பர்ஸ் திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் உள்ள 32 லட்சம் பேரில் 30.71 லட்சம் பேர் இணைக்கப்பட்டுள்ளனர் என்று துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கூறியுள்ளார்.

‘ஸ்பர்ஸ் (SPARSH)' மூலம் பாதுகாப்பு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்கள் (ராணுவம், கடற்படை, விமானப் படை) மற்றும் சார்ந்தோர்கள் தங்களது வாழ்நாள் சான்று சமர்ப்பிப்பதில் ஏற்படும் இன்னல்கள் மற்றும் ஓய்வூதியம் சார்ந்த குறைகளை நிவர்த்தி செய்ய சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் (CDA,Chennai) அலுவலகத்தின் சார்பாக, ஸ்பர்ஸ் ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாம் ஜிப்மர் ஆடிட்டோரிய வளாகத்தில் இன்று நடக்கிறது.

Read Entire Article