ஸ்டார்ட்அப் நிறுவனங்களை வளர்த்தெடுப்பது அவசியம்: கிஸ்புளோ நிறுவனர் சுரேஷ் சம்பந்தம் கருத்து

4 months ago 16

சென்னை: "தமிழ்நாடு 2030-0 ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதா ரத்தை அடைவதை இலக்காகக் கொண்டு பயணித்து வருகிறது. இந்த இலக்கை எட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வளர்த்தெடுப்பது அவசியம்" என்று கிஸ்புளோ நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சுரேஷ் சம்பந்தம் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இளம் ஸ்டார்ட்அப் தொழில்முனை வோர்களுக்கு, மார்க்கெட்டிங், பிராண் டிங், நிதி திரட்டுதல் உள்ளிட்டவை சார்ந்த வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கில் சுரேஷ் சம்பந்தம் 'ஐடியா பட்டறை' என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இதில் பங்கேற்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் சிறந்த வற்றுக்கு நிதியும் வழங்குகிறார்.

Read Entire Article