சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், ரூ.150 கோடியில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 82-வது பட்டமளிப்பு விழா, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: