ராமநாதபுரம்: மண்டபம் அருகே சுனாமி வீட்டில் வசிக்கும் மீனவருக்கு ரூ.67 ஆயிரம் மின் கட்டண பில் வந்ததால், அதிர்ச்சியடைந்த அவர் ஆட்சியரிடம் பகார் அளித்தார். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே வேதாளை கிராமத்தில் அரசு இலவசமாக கட்டிக் கொடுத்த சுனாமி வீட்டில் வசிப்பவர் மீனவர் ஷேக் ஜமாலுதீன்.
இவருக்கு இந்த மாத மின்கட்டணம் ரூ.67 ஆயிரம் என பில் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், முறையான மின் கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என, ராமநாத புரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்து புகார் அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வழக்கமாக எனது வீட்டுக்கு ரூ.500 முதல் ரூ.600 வரை மின் கட்டணம் வரும்.