ஷேக் ஹசீனா விரும்பும் வரை இந்தியாவில் தங்க வேண்டும்

4 months ago 13

கொல்கத்தா: இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதால் அவரை ஒப்படைக்க அந்நாடு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து முன்னாள் ஒன்றிய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மணி சங்கர் அய்யர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு நிறைய நல்லது செய்துள்ளார்.

அவர் விரும்பும் வரையிலும் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும். வாழ்நாள் முழுக்க அவர் இந்தியாவில் இருக்க ஆசைப்பட்டாலும் அது அனுமதிக்கப்பட வேண்டும். அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்’’ என்றார்.

 

The post ஷேக் ஹசீனா விரும்பும் வரை இந்தியாவில் தங்க வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article