வைகாசி விசாக திருவிழா: தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை

1 month ago 6

தூத்துக்குடி,

முருகப் பெருமானுக்குரிய முக்கியமான விழாக்களில் வைகாசி விசாகம் ஒன்று. வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தன்று முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரமாக கூறப்படுகிறது. விசாக நட்சத்திரத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் ஜூன் 9ம் தேதி வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகிற 9-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.  

Read Entire Article