வேளச்சேரியில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி

2 months ago 7

சென்னை: வேளச்சேரி பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை வேளச்சேரி எம்ஆர்டிஎஸ் அருகில் உள்ள ரயில்வே சாலை வடக்கு பகுதியில் வெள்ள பாதிப்பைத் தடுக்கும் வகையில் வெட்டப்பட்டுள்ள குளத்தை சுகாதாரத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ஜெ.குமரகுருபரன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், திருவிக நகர் சட்டப்பேரவை உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Read Entire Article