வேலூர்: காட்டுக்கொல்லை கிராமத்தில் 150 குடும்பங்களுக்கு வக்பு வாரியம் வரி கேட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக, வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியம் இறைவன்காடு ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுக்கொல்லை கிராமத்தில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் 150 குடும்பத்தினர் வசிக்கும் வீடுகள் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று கூறி, வரி கேட்டு வக்பு வாரியம் நோட்டீஸ் அனுப்பியதாகப் புகார் எழுந்துள்ளது.