வேறு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

3 months ago 7

புதுடெல்லி: கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது பெரம்பலூர், ஈரோடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது சொந்த கட்சி சின்னத்தை தவிர்த்து வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட்டனர். மேலும் எம்பியாகவும் பதவி வகித்தனர். எனவே இதுபோன்ற நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில்,‘‘தனக்கென்று சொந்தமாக கட்சி அதிகாரம் மற்றும் சின்னம் இருந்தும், கூட்டணிக்காக மாற்று கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும். அதற்கான அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘இதுபோன்ற மனுக்களை தேர்தல் நேரத்தின் போது தேர்தல் வழக்காக தாக்கல் செய்யுங்கள். இப்போது இதனை விசாரிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து முடித்து வைத்தனர்.

The post வேறு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article