வேன் டிரைவர் விஷம் குடித்து சாவு

3 months ago 9

குமாரபுரம், பிப். 16 : தக்கலை அருகே கீழகல்குறிச்சி வடக்குவிளையை சேர்ந்தவர் குபேரன். வேன் டிரைவர். குபேரன் மது குடித்துவிட்டு வேன் ஓட்டியதாக தெரிகிறது. போலீசார் அவர் மீது `டிரங்க் அண்ட் டிரைவ்’ வழக்குப்பதிவு செய்தனர். இதனால் விரக்தி அடைந்த குபேரன் சம்பவத்தன்று பாலாகுளம் பகுதியில் உள்ள தோட்டத்தில் விஷம் குடித்தார். குடும்பத்தினர் குபேரனை மீட்டு தக்கலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குபேரன் நேற்று இறந்தார்.

The post வேன் டிரைவர் விஷம் குடித்து சாவு appeared first on Dinakaran.

Read Entire Article