வேன் - ஆட்டோ மோதி கோர விபத்து - 5 பேர் பலி

7 months ago 25

கவுகாத்தி,

அசாம் மாநிலம் கச்சார் மாவட்டம் போர்ஹலாவில் இன்று மதியம் ஆட்டோ சென்றுகொண்டிருந்தது. அந்த ஆட்டோவில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் பயணித்தனர்.

ஆட்டோ ரனிஹட் பாலத்தில் பயணித்தபோது எதிரே வந்த வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணித்த 5 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஆட்டோ டிரைவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த ஆட்டோ டிரைவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article